search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் முற்றுகை"

    • தங்குவதற்கு இட வசதி செய்து தர வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நூருல்லாபேட்டை மற்றும் கோவிந்தபுரம் பகுதியில் ஏரிகால்வாய், நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 48 வீடுகள், 1 அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை வருவாய்த்துறையினரால் கடந்த வாரம் இடிக்கப்பட்டது.

    வீடுகள் இழந்த பொதுமக்களுக்கு வருவாய் துறை சார்பில், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்று இடமோ அல்லது நேதாஜிநகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளோ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    வீடுகள் இழந்த பொதுமக்கள் அனைவரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த புதன்கிழமை பள்ளியில் தூங்குவதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் பொது மக்களை பள்ளியிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

    இதனால் அப்பகுதியினர் சாலையோர பகுதிகள் மற்றும் மேம்பாலத்தின் கீழே தங்கி வரும் நிலையில் நேற்று மாலை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    ஒவ்வொரு வேலை உணவிற்கும், தங்குவதற்கு இடமில்லாத காரணத்தினால் கைக்குழந்தைகள், முதியவர்கள், இளம்பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களை வைத்துக்கொண்டு மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாகவும், எனவே அதிகாரிகள் உரிய மாற்று இடம் வழங்க வேண்டும்,

    மாற்று இடம் வழங்கும் வரை தற்காலிகமாக தங்குவதற்கு ஏதேனும் இட வசதி செய்து தர வேண்டும் என்று கூறி 50-க்கும் மேற்பட்டோர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து, தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டாட்சியர் சம்பத், டிஎஸ்பி (மாவட்ட குற்றப்பிரிவு) நிலவழகன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி தரும்படியும், அவ்வாறு பெறப்படும் கோரிக்கை மனுவின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • பொதுமக்களுடன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

    இந்த வங்கியில் நகை கடன் வைத்தவர்களின் நகை தனியார் வங்கியில் மறு அடமானம் வைக்கப்பட்டதும், நகை கடன் பெற்ற பலருக்கு முழுமையான தொகை வழங்காமல் இருந்ததும் புகார் எழுந்தது. மேலும் தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகளை லாக்கரில் வைத்து மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்க ப்பட்டது.

    இதனையடுத்து செயலா ளர் மணிவண்ணன், சஸ்பெண்டு செய்யப்ப ட்டார். பின்னர் அவர் தலை மறைவானார். முறைகேடு கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிய வரவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு முற்றுகை போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் கூட்டுறவு அலுவலர் செல்வராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. 17 பேர்களின் பெயரில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ.23.72 லட்சம் கடன் வழங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே இந்த வங்கியில் நகை கடன் வைத்தவர்களின் விபர ங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

    ஓரிரு நாளில் உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்த நிலையில் இன்று காலை மீண்டும் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு வந்தனர்.

    ஆனால் அங்கு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் யாரும் இல்லாததால் ஏமாற்றமடைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். பொதுமக்களுடன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருடன் ேசர்ந்து போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் முறைகேடு செய்த செயலாளரை கைது செய்ய வேண்டும்.

    அடகு வைத்த பொதுமக்களின் நகைகளை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்ப தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு திண்டுக்கல்லில் இருந்து வந்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதும் அவர்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    • கிராம நிர்வாக அலுவலரை மாற்ற கோரி நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • பணி யிடமாறுதல் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலராக நவாஸ் என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் சான்று வழங்க 20 நாட்கள் வரை காலம் தாழ்த்துவதாக புகார் எழுந்து வந்தது.

    மேலும் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் பெறுவதற்கு அதே அலுவலகத்தில் 4 இடைத் தரகர்களை நியமித்துள்ளதாகவும், அவர்கள் மூலமாக பணத்தை பெற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே கிராம நிர்வாக அலுவலர் அந்த சான்றிதழை வழங்க கையொப்பமிடுவ தாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    எனவே நிலக்கோட்டை தலைமையிடத்து துணை தாசில்தார் தங்கேஸ்வரியி டம் இது குறித்து புகாரளித்த னர். சிலுக்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக மாறுதல் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நாங்கள் கிராமங்கள் முழுவதும் போஸ்டர் ஒட்டி பஸ் மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

    மேலும் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் முற்றுகை யிட்டு பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர். ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பணி யிடமாறுதல் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    ×